அவன் வாசித்து விட்டுப் போன
வீணை அப்படியே
கிடக்கிறது!
வீணை அப்படியே
கிடக்கிறது!
என்னிடமிருந்த
தைரியம் எல்லாவற்றையும்
அவனுக்குப் பரிசாகக்
கொடுத்திருந்தேன்!
தைரியம் எல்லாவற்றையும்
அவனுக்குப் பரிசாகக்
கொடுத்திருந்தேன்!
மேலும்
அறிவித்தல் கிடைத்தது
பக்கத்தில் வீழ்ந்து
வெடித்த ஏதோவொன்றில்
அவன் சிதறிப்போனதாக...
அறிவித்தல் கிடைத்தது
பக்கத்தில் வீழ்ந்து
வெடித்த ஏதோவொன்றில்
அவன் சிதறிப்போனதாக...
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
சிதறல்களை சேர்த்து
எழுந்து வருவானென்று...
சிதறல்களை சேர்த்து
எழுந்து வருவானென்று...
ஏனென்றால்
அது அவனது வீணை!
அது அவனது வீணை!
க.மோகனதாசன்
No comments:
Post a Comment