Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, July 24, 2023

பரிவு என்பது...

 


பரிவு என்பது 

அடைக்கப்பட்ட பறவைக்கு இடப்படும் 

இரையைப் போன்றதல்ல - அது 

அந்தப் பறவைக்காகத் 

திறந்து காட்டும் ஆகாயத்தைப் போன்றது!

Tuesday, April 14, 2020

ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்


செவிகளை அடைக்கும் பேரிரைச்சலாக
மௌனம் தெருவிலே குந்தியிருக்க...
வீட்டின் நிழல் தரும் தகிப்பு - ஒரு
வெட்டவெளி வெயிலின் குளிர்ச்சியைத் தேட...
ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்
இறந்த காலத்தின் இசையை
எங்கிருந்தோவெல்லாம் மீட்டெடுத்துப் பாட...

Monday, March 16, 2020

விடுமுறை நாளொன்றில்...


விடுமுறையொன்றின் விலாசம்
மனதை அழுத்திப்பிடித்து வைத்திருக்கின்ற
ஒரு சூழமைதியின் தகிப்பில்
ஆணியடித்து மாட்டப்படுகிறது..

Tuesday, October 29, 2019

கையாலாகா பொம்மைகள்...


ஆழ்துளையினை நிரப்பிக்கொண்டிருந்த
துயரமெல்லாம்
யார்யாரோ ஏறிக்குந்தியிருக்கும் பெருமலைகளாயின!
அந்த அந்தகாரத்தில் சிலர்
தமக்குரிய வெளிச்ச ஆடையினை நெய்து கொள்வதற்காய்
சிறிது நேரமெடுத்துக்கொண்டனர்.
அதற்காகக் கொண்டுவரப்பட்டன
கையாலாகா பொம்மைகள்.
- க.மோ.




Monday, October 21, 2019

மழையில் நனைதல்....2


                               ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
                               கையோடு என் கடந்த காலத்தை
                               அழைத்து வந்திருந்தது!

                               இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
                               ஒரு பெருங்குரலெடுத்து
                               தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
                               ஆனாலும் இந்த மழை
                               என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!

                               ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
                               மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
                               நனைந்து கொண்டிருந்தான்
                              அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
                              நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!

Sunday, October 20, 2019

மழையில் நனைதல்....1



                                மழையின் அர்த்தமெது என அகராதியில்
                                தேடியலைந்தவர்களுக்கு - அது
                                தன்னை எழுதிச் சென்றது
                                ஒரு அழகிய கவிதையாய்

Tuesday, May 7, 2019

"பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி" நாடகத்தில் ஒரு பாடல்...

இந்த வரிகளை எழுதுவதற்கான சூழலைத் தந்த பறப்பிழந்த 'வண்ணத்துப்பூச்சி' இயக்குனர் திரு அ.விமலராஜ் அவர்களுக்கு நன்றிகள்.







        பாடல் வரிகள்  : க.மோகனதாசன்
        இசை                  : யூட் நிரோசன் குணநாதன்
        பாடியவர்          : சபேசன்

Monday, May 6, 2019

என்னைப் போல் கடுமையாகத் தோற்றுப் போய் வா!

எங்கோ பிழைக்கிறது!
எனது
சமன்பாடுகள் எப்பொழுதும்
சரியான 
விடைகளையே
தந்திருக்கினறன!
அப்படியானால்
ஏன்

சவால்களின் சதங்கை கட்டிக்கொண்டு...

எனக்காகத் தரப்பட்ட
பூக்களுடனான வாழ்க்கை
திருடப்பட்டது எப்போது?
மரந்தங்கள் 
சீரழிக்கப்பட்டதான போதில்
எனக்குள்

அவனது இலட்சியங்களில் சிறுநீர் கழித்தவர்கள்

நேற்று அவனது
கனவு பற்றி
காறி உமிழ்ந்துவிட்டுச்
சென்றனர் சிலர்!
அவனது
கனாவின் வாசலில்
சூரியன் கட்டித்
தொங்கவிட்டிருப்பதை
அவர்கள்

மனச்சாட்சியிடம் ஒரு தரம் பேசி விட்டு வா

தனக்காக மட்டும்
ஓலமிடும் தராதரமே...!
எங்களைப் பிடிங்கிய பின்பும்
எதற்காகப் புலம்புகிறாய்?
எங்கள் வலி சூடி

இருட்டுத்தான்.. ஏகாந்தம்தான்..

நடுங்கிக் கொண்டிருக்கும்
எனது கனவுகளின் இடுக்குகளில்
எட்டிப் பார்க்கின்றன
ஏகாந்தத்தின் வலிகள்!
சிதைந்து கிடந்த என்னை
சேர்த்துத்

சிதறல்களை சேர்த்து எழுந்து வருவானென்று...

அவன் வாசித்து விட்டுப் போன
வீணை அப்படியே
கிடக்கிறது!
அவன் திரும்ப ஏறி வந்த
தோணியின் துடுப்பை

இன்னும் விழுந்து கிடக்கிறேன்

இன்று நீ
கொழுத்திப் போட்டுவிட்டுப் போன
வார்த்தை

ஒரு சிறுவனின் டயறிக் குறிப்பிலிருந்து....

ஒரு முரட்டு
நிமிஷத்தில்
எமது ஒட்டு மொத்த
சந்தோசத்தையும்
எங்கள் அப்பாவுடன் சேர்த்து
அள்ளிக் கொண்டு சென்றனர்!
கணாமலாக்கப்பட்ட
எம் வசந்தங்களை

முந்தநாள் முதுகு சொறிந்தவன்

என்னைத் தோண்டி வெளியில்
போடுவதற்கு
பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!
ஒளியினால்
உருவாக்கப்பட்ட
என்னைக் கண்டு

நீங்களோ உங்களின் எதிர் மறைகளின் கழிவறைகளிலிருந்து

உங்களால் என்னை
வாசிக்க முடியாத போது
எழுத்தேயில்லை என்கிறீர்கள்!
எனது கரைக்குக் கூட
நீங்கள் வந்திருக்கவில்லை
ஆனால்

அதிசயமான இடைவெளிகளில் நின்று உரையாடுகின்றோம்

எமது சுவாசப் பையை
அவர்களிடம் கொடுத்துவிட்டு
மூச்சு விடுவதற்காய்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
நெஞ்சிலும் நினைவிலும்
ரத்தம் சொட்டும்

ஏனென்றால் எமது பிள்ளைகள் வெளிநாட்டில்…

கடக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஒட்டிக்கிடக்கின்றன 
வசந்தகால
ஞாபகத் திசுக்கள்!

குஞ்சுகளின்

விடியட்டும் காத்திருக்கிறேன்

பெரும் கைதட்டல்களுடன்
மீண்டும்
ஆரம்பிக்கின்றன
புதிய அலப்பறைகள்!

நான் என்

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...