Showing posts with label உரைகள். Show all posts
Showing posts with label உரைகள். Show all posts

Sunday, December 4, 2022

கதிரவன் த. இன்பராசாவின் அப்பாவின் ஆரிராரோ

 


அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் தொன்று தொட்டு வந்த மரபாகும். குழந்தையை கையில் எடுத்துக் கொள்ளுவது, மடியில் போட்டுக் கொண்டு தூங்க பண்ணுவது, காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று அம்மாவின் அண்மை அதற்கு ஓரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

Tuesday, March 16, 2021

வாழ்வில் நமக்குத் தெரிந்த ஒன்றின் மூலம் தெரியாத ஒரு அற்புதத்தை ஆழ்மனதில் உருட்டிவிட்டுப்போகும் தன்மையுடையவை ஆ.மு.சி.வேலழகன் அவர்களது வார்த்தைகள்


எங்கோ ஏதோ ஓர் குழந்தை துயருறுகையில் தம் பிள்ளைகளை இழுத்து  கட்டியணைத்துக் கொள்வது ஒவ்வோர் தகப்பனின் ஒவ்வோர் தாயின் அனிச்சை மற்றும் எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல். வன்முறை மிகுந்த வாழ்வில் எளியதைப் பற்றிக்கொண்டு அல்லது எளியதன் அழகில் மெல்லிய உணர்வுகளின் வழி கிறங்கி வாழச் சொல்லி அழைப்பவை ஆ.மு.சி.வேலழகன் ஐயாவின் எழுத்துக்கள். இயல்பாய் இரு, சுயசிந்தனையுடன் இரு என்பது அவர் எழுத்துக்களில் வெகுவாய்த்தொனிக்கும், வார்த்தைகளை மீறிய நாதமாக ஒலிக்கிறது. சிக்கலற்ற மொழியும், நனவோடை உத்தியும், நாம் வாழத்தவறி நடுவீதியில் கிடத்திவிட்டுச் செல்லும் அன்றாடத்தைப் புதிதாகத் துலக்கி வைத்து சக மனிதர்களை நேசத்தோடு வாழச்சொல்லி அழைக்கும் எழுத்துக்கள் ஆ.மு.சியினுடையது.

Sunday, March 7, 2021

அவர் எடுத்துத்தரும் அர்த்தமும் அதன் தத்துவமும் ஒரு கனவினை, ஒரு அழகிய வாழ்வினை வாழும்படி கை நீட்டி அழைக்கின்றன.

(ஆரையூர் அருள் அவர்களின் "வில்லடிப்பாட்டு" நூலுக்கான நயவுரை)


வில்லுப்பாட்டானது மக்களின் அகத்திலெழும் உணர்ச்சிகளோடு ஒன்றி வளரும் கலையாகக் காணப்படுகிறது. நாடகத்தன்மை மிகுந்த நிலையில் கதை கூறலில் இது உருவாக்கித் தரும் பயன்பாடுகள் பலவாகும். மரபு வழிக் கதைகள் முதல் இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரை வாழ்வியலை அதன் தத்துவத்தை எளிதாகக் கூறும் வல்லபம் வாய்ந்தது வில்லுப்பாட்டு. தமிழுக்குத் தனித்துவம் வாய்ந்த இலக்கிய வடிவமாகவும் ஆற்றுகை வடிவமாகவும் வில்லுப்பாட்டு இலங்குகின்றது. இதனால் மிகச்சிறந்த கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்ற நிலையை வில்லுப்பாட்டுப் பெறுகிறது.  மக்களையும் கதையின் போக்கினூடே ஒன்றவைத்துக் கதை கூறும் வடிவமாக, எந்தக் கால அளவுக்குள்ளும் ஒரு கதையினைப் படைத்துக்காட்ட ஏற்ற நாடக வடிவமாக இது திகழ்கிறது. ஆக நம்மோடு இயல்பாக உரையாடக்கூடிய தன்மை வில்லுப்பாட்டுக்குள்ளது. இந்த சாத்தியங்களைக் கருத்தில்கொண்டே, தமிழின் மகத்துவங்களை பண்பாட்டின் நடுவழியில் தவறவிடப்பட்ட வாழ்வை மீள கொணரும் வேட்கையில் பல்கலை வித்தகர் மூ.அருளம்பலம் ஐயா அவர்களால் காலத்தின் தேவைகருதி உருவாக்கப்பட்டிருக்கிறது 'வில்லடிப்பாட்டு' எனும் இந்நூலாகும். இந்தப் புத்தகம் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 36 புத்தகங்களை உருவாக்கி தமிழன்னைக்கு ஆரமாகச் சூட்டியிருக்கும் அந்தப் பெருமகனாரை நாமும் தலைவணங்கி நிற்கின்றோம்.

Wednesday, September 18, 2019

கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கு : சிலப்பதிகார கானல்வரியில் குறிப்பிடப்படும் இசைச்சேதிகளை உள்ளடக்கிய ஆய்வு



அறிமுகம் :
  கிழக்கிலங்கைத் தமிழர் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடானது முக்கிய இடத்தினைப்பெறுகின்றது. பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டினை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரிக்க முடியும். கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டுப்பரப்பில் தாய்த்தெய்வங்களே அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பார்த்ததனால் பெண் தெய்வ வழிபாடு தாய்த்தெய்வ வழிபாடாக மாறியது. ஆண்தெய்வங்கள் மீதில்லாத பயமும் மரியாதையும் பெண் தெய்வங்கள் மீது அதீதமாக வெளிப்படுவதை இந்த வழிபாட்டு முறைகளிலிருந்து காண முடிகின்றது. இவ்வழிபாடுகளின் போது இசைக்கென்று ஒரு தனியிடம் உண்டு. ஒப்பீட்டளவில் அதிகமான பெண் தெய்வ வணக்க முறையும் அதற்காக அதிகளவான இசைப்பாடல்களையும் கொண்டமைந்திருப்பது கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சங்களாகின்றன. அத்தோடு சிலப்பதிகாரத்தில் பெண் தெய்வ வணக்க முறைகள், அதன் உருவாக்கற் பின்னணி என்பன பற்றி தெரிவித்திருப்பதோடு குறிப்பாக புகார்க்;காண்டத்தின் கானல்வரியில் இசை பற்றிய பல்வேறு செய்திகளையும் எம்மால் அறிய முடிகின்றது. இந்தப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கினை ஆய்வு செய்வதாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அமைகின்றது.

Tuesday, June 4, 2019

'நானிலம் யாவுமோர் நாடக மேடையே ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர் தாம்'

மதங்கசூளாமணியும் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்


  தத்தமது கருத்துரைக்கும், கட்டுரைக்கும், நாடக மேடைக்கும் சேக்ஸ்பியரைப் பயன்படுத்தி வரும் இலக்கிய உலகில் அந்த ஆங்கில நாடகாசிரியனை ஆழ்ந்து நுணுகிப்பார்க்கும் ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். சுவாமிகளின் பன்மொழி அறிவையும் இலக்கிய ரசனையையும் ஆய்வுக் கண்ணோட்டத்தினையும் ஒருங்கே புலப்படுத்தும் உயரிய நூல்தான் மதங்கசூளாமணி. இந்த ஒப்பியல் நோக்கு பற்றிய ஒரு பார்வையாக இந்த உரையானது அமைகிறது.

Saturday, May 11, 2019

மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையை நாம் உணர்வதும் தொடர்வதும் என்பது இந்த நிகழ்வின் பிரதான செய்தியாகின்றது.

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் பற்றிய அறிமுகக்குறிப்பு...


 'நான் சிறுவனாக இருக்கும் போதே என்பாட்டியிடம் நிறைய கதை கேட்டிருக்கிறேன். என் பாட்டியின் பெயர் வள்ளிப்பிள்ளை. அவர் சொன்ன கதைகளை அப்படியே என் நண்பர்களிடமும் கூறுவேன். பின்னேரங்களில் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஆல மரத்தடியில் அமர்ந்து கதை சொல்வேன். என் கதையை கேட்க ஒரு கூட்டமே இருக்கும். குதிரை ஓடுவது மன்னரின் சிரிப்பு என கதைக்குள் வரும் ஒவ்வொரு விடயங்களையும் மிமிக்ரி செய்து சொல்வேன். நான் இப்படிக்கதை சொல்லும் விடயம் நான் உயர்தரம் படித்த

Sunday, May 5, 2019

உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது...

சுவாமி விபுலானந்தரின் சிந்தனைத்துளியொன்றை அடி நாதமாகக்கொண்டு இளைஞர்களை நோக்கி சில கருத்துக்கள்...


'உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப்பார், எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து, உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின், அறிவின், சக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும்'  என இளைஞர்களைப் பார்த்து சுவாமி விவேகாநந்தரால்  குறிப்பிடப்பட்டபடி இளைஞர்களே இன்றையின், நாளையின் சக்திகள்.

சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும்

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...