Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Tuesday, December 13, 2022

தகவல் தொடர்பியலின் மாற்ற வரலாறு

 

தகவல் பரிமாற்ற சாதனங்களையும், அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் (Communications) ஆகும்மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தகவல் பரிமாற்றமாகும். பேச்சு, மொழி, எழுத்து, அச்சு, தூது (மனிதன், புறா), புகை சைகை, முரசு, தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல நுட்ப முறைகளை மனிதன் தகவல் பரிமாற்றத்துக்கு இதுவரை பயன்படுத்தியிருக்கின்றான்

Wednesday, November 16, 2022

தொடர்பாடல் பற்றிய அறிவு ஏன் எமக்கு அவசியமாகின்றது?



உலகில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை, தங்களுக்கு இடையில் கருத்துக்களையும், செய்திகளையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொண்டே வருகின்றன. பரிணாமவளர்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மனித இனம் பல வகையான ஊடகங்கள், ஊடக உத்திகள், ஊடகக்காவிகள் என்பவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது. தகவல் தொடர்பாடலின் பல்பக்கப் பரிமாணம் உலகை,  உலகக் கிராமம் என்று சொல்லுமளவிற்கு வளர்ச்சிகண்டுள்ளது.

Sunday, April 12, 2020

"தென்னாடுடையவனே எந்நாட்டிலும்..." திரு ஆ.மு.சி வேலழகன் அவர்களது நூலுக்கானஅணிந்துரை



இது உலகத் தோற்றத்தின் கதை, நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விடயங்களோடு, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் மனித பரிணாமத்தின் கதை. அந்த வரலாற்றிலும் பரிணாமத்திலும் தமிழ்ப்பண்பாட்டின் வகிபங்கு பற்றிய கதை. வரலாற்று உண்மைகளை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் மேலும் நம்மை தேடும் விதத்திலும் கூற முடியுமா? நம்மைத் திகைக்க வைக்கிறார் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்கள். 

Saturday, April 11, 2020

ஆத்திசூடியில் ஒளவை கூறும் வாழ்வியல் நெறிகள்.


அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை அவதானிக்கும் போது, வாழ்வைப்பற்றி குறிப்பாக மனித இயக்கங்களை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை சுருக்கமாக அதே நேரம் தெளிவாகச் சொல்வதாக அமைந்து காணப்படுகின்றன. 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல் சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது. 

ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு 'ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும்' என்ற யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் தருகிறது. ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளனவாக ஆத்திசூடி அமைந்துள்ளது. வாழ்க்கை குறித்த கவனத்தைத் தருவதாக வெளிப்படும் ஒளவையாரின ஆத்திசூடி வரிகளுக்குப் பின்புலமாக தெளிவான பிரக்ஞா பூர்வமான ஒரு மனம் செயல்படுவதைக் காண முடியும்.

மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக் கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்கு முன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னைக் காண்கிறான். வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும். சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அமிழ்த்தி விடுவார்கள். எனவே தான் ஒளவை சொன்னார், 'மிகைப்பட பேசேல்' என்று. அதிகம் கலவரப்படாது சாதாரணமாக பேசிப் பழக வேண்டும். அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை சரி செய்யும் பக்குவம் வரும்.

Friday, June 7, 2019

நவீன அரங்கில் காட்சியமைப்பு

   ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட்புலக் கூறுகள் மிக முக்கியமாகும். ஆகவே காட்சியமைப்பு முக்கியமாகின்றது. காட்சியமைப்பு சூழலையும் கதையுடன் ஒன்றிப்பதற்கான மனநிலையையும் கதையின்/பாத்திரத்தின் நிலையையும் கதைப்பின்னணியையும் காட்டி நிற்கின்றது.

Thursday, June 6, 2019

நாடகங்களில் ஒப்பனை


பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது...

    ஒப்பனை எனும் போது 'உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்களைப் பூசுதல் ஒப்பனை எனப்படும். ஒப்பனையானது அரங்கின் தொடக்க காலத்திலிருந்தே முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. ஆக ஒப்பனைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சுருக்கமாக, வரலாற்று ரீதியாக ஒப்பனையினை விளங்கிக் கொண்டு ஒப்பனையின் நுணுக்கங்களையும் அதனை எவ்வாறு பாரம்பரிய அரங்குகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் பார்த்தல் சிறப்பாக அமையும்.

Thursday, May 16, 2019

நவீனத்தைப் புரிந்து கொள்ளல்

  'மொடேனிஸம் என்பது பொதுப்படையாக நோக்கும் போது, அது மேற்கத்தேயக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தேயப் பண்பாட்டிலே ஏற்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்டனவும், தடையற்ற பண்புடையனவுமான, மரபுத்தள விடுபாடுகளைக் குறிக்கும்.'
பேரா.கா.சிவத்தம்பி

Thursday, May 9, 2019

பெரும் அதிர்வலையை எம்மில் பதிவு செய்திருக்கும் ஒரு பல்துறைக்கலைஞரின் இழப்பு...


பல்துறைக் கலைஞர் வீரசிங்கம் ஐயா அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பு



தனக்காக தன்னையே உருவகித்துக்கொள்ள வைக்கும் சிறப்பு ஒரு சிலருக்கேயுண்டு. அந்த சிலரது இல்லாமையை மரணத்தின் கைகள் காலத்தின் மீது மிகக்கடுமையாக எழுதி விட்டுச்செல்கிறது. ஒரு கலைஞனின் மரணம் என்பது பிரத்யேக குணநலன்கள் கொண்டது. அது

Tuesday, May 7, 2019

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணம்...

இக்கட்டுரை 2017 ல்  "பேராசிரியர் சி.மௌனகுரு" மகுடம் சிறப்பிதழுக்காக எழுதியது...

 க.மோகனதாசன்
 
    பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணமென்பது 17 வருடங்களாகத் தொடர்வதாகும். 1994, 1996களில் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளில் பேராசிரியரைச் சந்தித்திருந்தாலும் 2001 லிருந்தே அவரது கையைப் பிடித்துக்கொண்டு சிகரங்கள் பற்றிய கனவுகளுடன் எம்மால் பயணிக்க முடிந்தது. அவர் எமக்கான சிறகுகள் மட்டுமன்றி நாம் பறப்பதற்கான வானத்தினையும்

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...



    ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத்தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

    ஔவையார் அமர்ந்த திண்ணை வீட்டில் "சிலம்பி" என்ற தாசி குலப் பெண் இருந்தாள். தன்

Sunday, May 5, 2019



      ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது.

Saturday, April 27, 2019

பறை எனும் தமிழர் அடையாளம்

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நடனமான பறைமேளம் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. அதிர்ந்தெழும் பறையிசை- ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சக்தி கொண்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம்.

தோற்கருவிகளின் பொதுப் பெயராகவே இலக்கியங்களில் பறை என்பது

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...