Showing posts with label பகிர்வுகள். Show all posts
Showing posts with label பகிர்வுகள். Show all posts

Wednesday, June 25, 2025

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

 


ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

Thursday, June 19, 2025

"கணியன் பூங்குன்றனார்"

"கணியன் பூங்குன்றனார்" சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவர் கணியன். கணிமேதையார், கணிமே வந்தவள். என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார்.

Thursday, April 17, 2025

பயணம்..



ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

Wednesday, May 15, 2024

ஒருவர் போல் மற்றவர் இல்லை



மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன. பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது நிகழ்வதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களைப் போலன்றி மற்ற உயிரினங்கள், தம் சக உயிரினங்களை அதிசயக்கத்தக்க பல வழிகளில் வேறுபடுத்தி அறிகின்றன.

Monday, July 24, 2023

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

 "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத்திலிருந்து.. பூவின் வாழ்வை சற்று நுட்பமாக அணுகுவோமா?

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே,
முகந்தொட காத்திருந்தேன்..!
மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்,
மணம் கொள்ள காத்திருந்தேன்..!
மகரந்தம் தேடி நுகரும் முன்னே,
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..!
("நல்லை அல்லை..." காற்றுவெளியிடை திரைப்படப் பாடல்)

Saturday, December 3, 2022

வேலை

 

சம்பளம் செய்யாததை "சுதந்திரம்" செய்யும்.

இப்ப நிறைய நிறுவனங்களில் லீடர்ஷிப்புக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, புது பசங்க வந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள வேலையை ரிசைன் பண்ணிடறாங்க. விசுவாசம் இல்லை என கவலைப் படுகிறார்கள். அவர்கள் இந்த தலைமுறையின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டார்கள். 

நோய் நொடி

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் நொடி என்றால் என்ன ?



நோய் என்பது தெரியும். உடலுக்கோ மனத்திற்கோ ஏற்படும் நலக்குறைவு. ஒருவர் நோயுறுவதற்கு புறச்சூழலும் காரணமாகலாம். அவருள் நிகழ்வனவும் காரணமாகலாம். நோயில்லாமல் வாழ்வதுதான் பெரும்பேறு. தருமரிடம் வினவப்பட்ட வினா ஒன்று : உலகில் ஒருவர் அடைதற்கரிய செல்வம் எது ? அவருடைய உடல்நலம் (ஆரோக்கியம்) என்பது அன்னார் விடை.  

நொடி என்பது தாழ்வுறுதல். அதுநாள்வரை வாழ்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி. நொடித்துப் போதல் என்று சொல்வார்கள். நோய் என்பது உடல்நலக்குறைவு. நொடி என்பது திகழ்நலக்குறைவு. பொருளியல் நோக்கு மட்டுமில்லை. நன்னிலை வீழ்ச்சிகள் யாவும் நொடித்துப் போதலே. 

உடலாலும் தேய்வின்றி, உள்ள பிற நிலையாலும் தாழ்வின்றி வாழ்தலே நோய்நொடியின்றி வாழ்தல்.

-மகுடேசுவரன்

Saturday, November 12, 2022

நாடகப்பனுவல்

முன் குறிப்பு: நான் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையை விட்டு வந்து 23 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் விட்டகுறை, தொட்டகுறையா மாணவர்களின் விசாரிப்புகளும் வினாக்களும் தொடர்கின்றன. அதைவிடவும் இலங்கையில் அரங்கியல் பயிலும் பலரும் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது தனித்தனியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்காகச் சிலவற்றை எழுதுகிறேன். அரங்கியலில் விருப்பம் உள்ளவர்களுக்கும் பயன்படலாம் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்கள் விலகிச் செல்லலாம்.

Sunday, September 25, 2022

கலை என்றால் என்ன?


கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை பொருளாகவும் இருக்கும்.

Sunday, July 19, 2020

சந்தோசமான வாழ்வு என்பது வசதிகளில் இல்லை...

சிறு குருவி ஒன்றுக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.


இதுவரை அந்தக் குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

Saturday, July 18, 2020

'இதழகல்' குறட்பாக்கள்

கவிஞர் வாலியை இவ்வாறானதொரு பாடலை எழுதத் தூண்டியது எது? திருக்குறள் ஏராளமான ஆச்சரியங்களைக் கொண்டது. உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாத குறட்பாக்களும் அதில் அடக்கம். இவை  'இதழகல்' குறட்பாக்கள் என்று அழைக்கப்படும். அதாவது உதடுகள் ஒட்டுவதற்குக் காரணமான எழுத்துக்களில்லாது இப்பாடல்கள் புனையப்பட்டிருக்கும். திருக்குறளில் 24 குறட்பாக்கள் இவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றன.

Sunday, July 5, 2020

அளவில் பெரிய கோப்புக்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்? how to share big files online?


நாம் மின்னஞ்சலிலோ வேறு வழிகளிலோ இன்னொருவருக்கு தகவல் பரிமாறிக் கொள்ளும் போது, குறிப்பாக காணொளிகளை பகிரும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எம்மால் அனுப்பமுடிவதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய மென் பொருட்கள் அல்லது வலைத்தளங்கள் சம்பந்தமான பார்வையிது..

Tuesday, April 14, 2020

வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889'


இன்றைய சூழலில் வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889' ஓவியம் பெருங்குரலெடுத்து என்னோடு பேசுகிறது..


நான் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பேராசிரியர் மௌனகுரு sir அவர்கள் விரிவுரைக்காக எனக்குத் தரும் பாடங்கள் பெரும்பாலும் கலை வரலாறு, ஓவிய வரலாறு என்பனவாகவே இருக்கும். வான்கா, கோகான், மொனே, செசான், சல்வடோர் டாலி, பிக்காசோ, ரெனே மக்ரித், லியனாடோடாவின்சி, மைக்கல் அஞ்சலோ, றபாயல், ஆதிமூலம், தனபால், அல்போன்சா, மூக்கையா, மார்க் மாஸ்டர், ஜோர்ஜ் கீத், மங்சுசிறி என நிறைய ஓவியர்களும் அவர்களது ஓவியங்களும் எனக்கு அப்போது அறிமுகமாயின. சிலரது சில ஓவியங்கள் அப்படியே மனதில் ஒட்டிவிடும். பிக்காசோவின் குவார்ணிகா, சல்வடோர்டாலியின் வடிந்தொழுகும் கடிகாரங்கள், வான்காவின் சூரியகாந்தி, கோகானின் சூரியோதயம், மைக்கல் அஞ்சலோவின் ஆதாமின் படைப்பு, ரெனே மக்ரித்தின் பைரனீஸ் கோட்டை போன்றன சில உதாரணங்கள்.

Sunday, December 15, 2019

இந்த மனசு சொல்பேச்சு கேக்காமல் அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளைப் பார்க்க...


தலைவன் போர்க்களத்திலிருந்து ஊர் திரும்புகிறான். தேரில் மிக விரைவாக காதலியைத்தேடி வருகிறான். வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள். அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது. ஆபத்தான வழி.

Monday, December 9, 2019

வஞ்சப் புகழ்ச்சி



தியமான் மீது பகை கொண்ட, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்  தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும்  செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான்,  தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி  என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஔவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். ஔவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தொண்டைமானின் மாளிகையில் ஔவைக்கு மிகுந்த மரியாதை அளிக்ககப்பட்டது. 

Saturday, November 9, 2019

ஸ்டீஃபன் ஹாக்கிங் - My Inspiration


ஐன்ஸ்டினுக்குப் பிறகு விஞ்ஞான உலகிலிருந்துகொண்டு பிரபஞ்ச புதிர்களின் முக்கியம் எனக் கருதப்படும் கருந்துளை குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய மனிதர் தன்னுடைய 76 வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...