Sunday, December 15, 2019

இந்த மனசு சொல்பேச்சு கேக்காமல் அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளைப் பார்க்க...


தலைவன் போர்க்களத்திலிருந்து ஊர் திரும்புகிறான். தேரில் மிக விரைவாக காதலியைத்தேடி வருகிறான். வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள். அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது. ஆபத்தான வழி.

Monday, December 9, 2019

வஞ்சப் புகழ்ச்சி



தியமான் மீது பகை கொண்ட, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்  தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும்  செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான்,  தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி  என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஔவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். ஔவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தொண்டைமானின் மாளிகையில் ஔவைக்கு மிகுந்த மரியாதை அளிக்ககப்பட்டது. 

Tuesday, November 12, 2019

வெல்லவூர் சுபேதனின் "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்"

கவிதை நூலுக்கான நயவுரையிலிருந்து நறுக்கியவை...


ஒரு மழை நாளில் வெல்லவூர் சுபேதனும் ஈழக்கவி ரசிகுமாரும் என்னைச்சந்திக்க வந்திருந்தனர். தான் நனைந்தாலும் தனது குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்ளும் தாயைப்போல், நனைந்திருந்த தமக்குள்ளிருந்து நனையாமல் வைத்திருந்த நதியில் நீந்தும் நட்சத்திரங்களைத் தந்திருந்தனர்.


Saturday, November 9, 2019

ஸ்டீஃபன் ஹாக்கிங் - My Inspiration


ஐன்ஸ்டினுக்குப் பிறகு விஞ்ஞான உலகிலிருந்துகொண்டு பிரபஞ்ச புதிர்களின் முக்கியம் எனக் கருதப்படும் கருந்துளை குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய மனிதர் தன்னுடைய 76 வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.

Tuesday, October 29, 2019

கையாலாகா பொம்மைகள்...


ஆழ்துளையினை நிரப்பிக்கொண்டிருந்த
துயரமெல்லாம்
யார்யாரோ ஏறிக்குந்தியிருக்கும் பெருமலைகளாயின!
அந்த அந்தகாரத்தில் சிலர்
தமக்குரிய வெளிச்ச ஆடையினை நெய்து கொள்வதற்காய்
சிறிது நேரமெடுத்துக்கொண்டனர்.
அதற்காகக் கொண்டுவரப்பட்டன
கையாலாகா பொம்மைகள்.
- க.மோ.




Monday, October 21, 2019

மழையில் நனைதல்....2


                               ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
                               கையோடு என் கடந்த காலத்தை
                               அழைத்து வந்திருந்தது!

                               இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
                               ஒரு பெருங்குரலெடுத்து
                               தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
                               ஆனாலும் இந்த மழை
                               என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!

                               ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
                               மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
                               நனைந்து கொண்டிருந்தான்
                              அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
                              நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!

Sunday, October 20, 2019

மழையில் நனைதல்....1



                                மழையின் அர்த்தமெது என அகராதியில்
                                தேடியலைந்தவர்களுக்கு - அது
                                தன்னை எழுதிச் சென்றது
                                ஒரு அழகிய கவிதையாய்

Wednesday, September 18, 2019

கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கு : சிலப்பதிகார கானல்வரியில் குறிப்பிடப்படும் இசைச்சேதிகளை உள்ளடக்கிய ஆய்வு



அறிமுகம் :
  கிழக்கிலங்கைத் தமிழர் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடானது முக்கிய இடத்தினைப்பெறுகின்றது. பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டினை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரிக்க முடியும். கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டுப்பரப்பில் தாய்த்தெய்வங்களே அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பார்த்ததனால் பெண் தெய்வ வழிபாடு தாய்த்தெய்வ வழிபாடாக மாறியது. ஆண்தெய்வங்கள் மீதில்லாத பயமும் மரியாதையும் பெண் தெய்வங்கள் மீது அதீதமாக வெளிப்படுவதை இந்த வழிபாட்டு முறைகளிலிருந்து காண முடிகின்றது. இவ்வழிபாடுகளின் போது இசைக்கென்று ஒரு தனியிடம் உண்டு. ஒப்பீட்டளவில் அதிகமான பெண் தெய்வ வணக்க முறையும் அதற்காக அதிகளவான இசைப்பாடல்களையும் கொண்டமைந்திருப்பது கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சங்களாகின்றன. அத்தோடு சிலப்பதிகாரத்தில் பெண் தெய்வ வணக்க முறைகள், அதன் உருவாக்கற் பின்னணி என்பன பற்றி தெரிவித்திருப்பதோடு குறிப்பாக புகார்க்;காண்டத்தின் கானல்வரியில் இசை பற்றிய பல்வேறு செய்திகளையும் எம்மால் அறிய முடிகின்றது. இந்தப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கினை ஆய்வு செய்வதாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அமைகின்றது.

Saturday, July 6, 2019

மாணவர்களுக்கு ஒரு தெளிவான கற்றல் அனுபவத்தை தரவல்லது...


வாழ்த்துரை



பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக திகழும் நண்பன் நாகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது பல்கலைக்கழகம் என்றாலும் அவரது ஆளுமையும் சிந்தனைப்போக்குமே அவரின் தோளில் கைபோட்டுக்கொண்டு தொடர்ச்சியாக பயணிப்பதற்கான பாதையினை உருவாக்கித்தந்திருந்தன. பல்கலைக்கழக காலங்களில் இவர் பங்கு பற்றிய பல்வேறு ஆற்றுகைகளும் காத்திரமான நாடகம் சார் ஆய்வரங்குகளும் இவர் யார்? இவரது ஆற்றல் என்ன? இவரது கருத்துலகம் என்ன? என்பதை சரியாக அடையாளம் காட்டியிருந்தன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பன் நாகேந்திரன் மிக ஆழமான புலமைத்தேர்ச்சியுள்ளவன் என்பதை அவரோடு கதைக்கும் சிறிது நேரத்திலேயே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

Monday, July 1, 2019

மண்வாசனையை அள்ளி வார்த்தைகளிலும் சித்தரிப்புக்களிலும் அப்பியிருக்கிறார்...

பாரத்தின் 'துளிர் இலை' சிறுகதை நூலுக்கான அறிமுகக் குறிப்பு...


  படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் தமது அனுபவங்களை படைப்புக்களாக வெளியிடுகின்றனர். மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்லும் போது சில அனுபவங்கள் பொது அனுபவங்களாகவும் ஆகிவிடுகின்றன. அவ்வாறான பொது அனுபவங்கள் அப்படைப்பின் அங்கீகாரத்தினை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றன. ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவதே சிறுகதையாகும். சிறுகதைகள் தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாகக் கையாள முடியும் என்பதனாலாகும்.

Thursday, June 20, 2019

நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க...

ரிஷி வித்ஞானியின் "அரோகரா" கவிதை நூலுக்கான அணிந்துரையிலிருந்து....


       நம்மைச் சுட்டெரிக்கின்ற வெப்பத்தினை மொழி பெயர்க்க மௌனமான ஆர்ப்பரிப்பு ஒன்று தேவைப்படுகின்றது. அந்த வேலையை கவிதை கச்சிதமாகச் செய்துவிடுகிறது. உள்ளதிலிருந்து உணர்ந்ததைச் சொல்வதும் உணரச் செய்வதும் கவிதையாகின்றது. இதனாலேயே கவிதையினை தம்முணர்வின் ஊடகமாகவும் தம்மை ஆக்கிரமிக்கும் அவஸ்தைகளின் பாசையாகவும் பலர் பயன்படுத்துகின்றனர். காலத்தின் கைகளாலும் சில சூழ் நிலைச் சிக்கல்களின் நகங்களாலும் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதறிப் போய்க் கிடக்கின்ற மனங்களின் வார்த்தைகளை எடுத்து  பலர் கவிதை புனைய முனைகின்றனர். சிலவை வெறும் கூக்குரல்களாகவும் சிலவை ஆத்மாவின் வேர் சென்று உசுப்பி விடுகின்ற விசாரணைகளாகவும் அமைந்துவிடுகின்றன. 

"இறைநிலையுடன் இரண்டறக் கலப்பதற்கு இசை என்ற யோக முறை"

கிரான்குளம் பாலமுருகன் புகழ்பாடும் , கவிஞர் ஜீ. எழில்வண்ணனின் "வேல்நாதம்" இறுவட்டுக்கான அறிமுகவுரை


    சிறகுகளைக்காப்பாற்றிக்கொள்ள பூக்கள் பக்கமே திரும்பாத வண்டு, வேர்களை வாரிச்சுருட்டி தண்ணீரைப்பார்த்து நடுங்கும் மரம், சூரியக்குச்சி எங்கே உரசி விடுமோ என்று உருண்டு உருண்டு ஓடப்பார்க்கும் பூமி, சமூக வலைத்தளங்களில் தொலைந்து போன மனிதர்கள் என அடுக்கடுக்காய் எம்மை சூழ்ந்து நிற்கின்றன அவலங்கள். மௌனச் சுமையுடன் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது நேரத்தின் அவசியமும் கூட. எண்ணற்ற ஞாபகங்கள், பிள்ளைப் பிராயத்து உடைமைகள், முன்னோர் சேர்த்து வைத்த முதுசங்கள், மண்ணின் மகிமைகள், இயற்கையின் இதங்கள், ஊரின் உன்னதங்கள், ஒன்றிணைக்கும் நம்பிக்கைள் என எல்லாவற்றையும் போக்கற்ற ஒரு பெரு வலியின் நடு வழியில் கிடத்திவிட்டு ஒரிரு பெருமூச்சுக்களுடன் மட்டும் கடந்து செல்ல முடிகிறது எம்மால்.

Friday, June 14, 2019

துயரங்களின் பெருமூச்சுச் சுவாலைகளிலிருந்தே எல்லோருக்குமான பிரியங்களை சமைக்க முயன்றிருக்கிறார்...

மெய்யநாதன் கேதீஸ்வரனின் 'சகதிப்புழுக்கள்' நாடகத்திற்கான அறிமுகக்குறிப்பு...  

  அரங்கின் முக்கிய மூலமாக நாடக ஆசிரியர் விளங்குகின்றார். அரங்க நிகழ்வில் அவர் நேரிடையாக பங்குபெற்றாலும், பெறாவிடினும் அவருடைய எழுத்து வடிவில் உள்ள நாடகப் பனுவல் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்நாடகப் பனுவலானது வாசகருக்கோ அல்லது பார்வையாளருக்கோ செய்தியினைக் கூறும் பொருட்டே படைக்கப்படுகின்றன என்றாலும் இவை ஒலி, சைகை, படம், வசனம், எழுத்து எனப் பல வடிவத்தில் அமைந்த எண்ணிறைந்த குறிகளின் ஒருங்கிணைவால் கட்டப்படுகிற பனுவல்கள் எனலாம். இவ்வகையான நாடகப் பனுவல் கவிதை வடிவிலோ அல்லது வசன வடிவிலோ இரண்டும் சேர்ந்த வடிவத்திலோ எழுதப்படுகின்றன. 

Friday, June 7, 2019

நவீன அரங்கில் காட்சியமைப்பு

   ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட்புலக் கூறுகள் மிக முக்கியமாகும். ஆகவே காட்சியமைப்பு முக்கியமாகின்றது. காட்சியமைப்பு சூழலையும் கதையுடன் ஒன்றிப்பதற்கான மனநிலையையும் கதையின்/பாத்திரத்தின் நிலையையும் கதைப்பின்னணியையும் காட்டி நிற்கின்றது.

Thursday, June 6, 2019

நாடகங்களில் ஒப்பனை


பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது...

    ஒப்பனை எனும் போது 'உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்களைப் பூசுதல் ஒப்பனை எனப்படும். ஒப்பனையானது அரங்கின் தொடக்க காலத்திலிருந்தே முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. ஆக ஒப்பனைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. சுருக்கமாக, வரலாற்று ரீதியாக ஒப்பனையினை விளங்கிக் கொண்டு ஒப்பனையின் நுணுக்கங்களையும் அதனை எவ்வாறு பாரம்பரிய அரங்குகளுக்கு பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் பார்த்தல் சிறப்பாக அமையும்.

Tuesday, June 4, 2019

'நானிலம் யாவுமோர் நாடக மேடையே ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர் தாம்'

மதங்கசூளாமணியும் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்


  தத்தமது கருத்துரைக்கும், கட்டுரைக்கும், நாடக மேடைக்கும் சேக்ஸ்பியரைப் பயன்படுத்தி வரும் இலக்கிய உலகில் அந்த ஆங்கில நாடகாசிரியனை ஆழ்ந்து நுணுகிப்பார்க்கும் ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்படுத்தியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். சுவாமிகளின் பன்மொழி அறிவையும் இலக்கிய ரசனையையும் ஆய்வுக் கண்ணோட்டத்தினையும் ஒருங்கே புலப்படுத்தும் உயரிய நூல்தான் மதங்கசூளாமணி. இந்த ஒப்பியல் நோக்கு பற்றிய ஒரு பார்வையாக இந்த உரையானது அமைகிறது.

Thursday, May 23, 2019

"மனசு எத்தனை துண்டுகளாக உடைந்து கிடந்தாலும் அத்தனையும் தானாகவே ஒட்டக்கூடிய ஒரு மாய வித்தையினை இது புரிந்திருக்கிறது"


அழகு தனுவின், மட்.மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயத்திற்காக பாடப்பெற்ற 'ஓங்கார நாமம் இசைப் பாமாலை' நயவுரை


  இயந்திரங்களுடன் பழகி மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் உணர்வுகளை, கவலைகளை, கஸ்டங்களை, சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரியாத ஒருவித தனிமைப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தங்களும் மனப்பிறள்வுகளும்

தினேஸ்குமாரின் 'ஜக்கம்மா' ஆய்வு நூலுக்கான அறிமுகக்குறிப்பு


     'இது எங்கள் புனித நிலம்.  ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும்,

Sunday, May 19, 2019

தீராத பிரார்த்தனையில் திளைத்திருக்கிறது மனசு

"ஆரையம்பதி கண்ணகையம்மனின் புகழ்பாட வந்தோம்" இறுவட்டு பாடல்களுக்கான  நயவுரை...


 இற்றைப்பொழுது தனிமை மிகும் இதயத்தின் இடுக்குகளில் நிம்மதியை தேடிக்கொண்டு தவிக்கிறது. இந்த துயரம் கொடுக்கும் தனிமையின் பெருவலி உள்ளுக்குள் நெருப்பொன்று பூத்த உணர்வாய் அலைகிறது.

Thursday, May 16, 2019

நவீனத்தைப் புரிந்து கொள்ளல்

  'மொடேனிஸம் என்பது பொதுப்படையாக நோக்கும் போது, அது மேற்கத்தேயக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தேயப் பண்பாட்டிலே ஏற்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்டனவும், தடையற்ற பண்புடையனவுமான, மரபுத்தள விடுபாடுகளைக் குறிக்கும்.'
பேரா.கா.சிவத்தம்பி

Tuesday, May 14, 2019

செய்தி மடல் "சொர்ணாளி"

அழகு தனுவின் 'சுமைகள்' குறுந்திரைப்படத்திற்கான நயவுரை


  ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் இளைஞர்கள் புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். இன்று அந்த இடத்தைக்குறும்படம் எடுத்துக்கொண்டது. குறுந்திரைப்படங்கள் கருத்தியல் சார்ந்தும் பயன்படுத்தும் நுட்பங்கள் சார்ந்தும் பல தளங்களில் செயற்படுகின்றன.

Saturday, May 11, 2019

மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையை நாம் உணர்வதும் தொடர்வதும் என்பது இந்த நிகழ்வின் பிரதான செய்தியாகின்றது.

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் பற்றிய அறிமுகக்குறிப்பு...


 'நான் சிறுவனாக இருக்கும் போதே என்பாட்டியிடம் நிறைய கதை கேட்டிருக்கிறேன். என் பாட்டியின் பெயர் வள்ளிப்பிள்ளை. அவர் சொன்ன கதைகளை அப்படியே என் நண்பர்களிடமும் கூறுவேன். பின்னேரங்களில் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஆல மரத்தடியில் அமர்ந்து கதை சொல்வேன். என் கதையை கேட்க ஒரு கூட்டமே இருக்கும். குதிரை ஓடுவது மன்னரின் சிரிப்பு என கதைக்குள் வரும் ஒவ்வொரு விடயங்களையும் மிமிக்ரி செய்து சொல்வேன். நான் இப்படிக்கதை சொல்லும் விடயம் நான் உயர்தரம் படித்த

Thursday, May 9, 2019

பெரும் அதிர்வலையை எம்மில் பதிவு செய்திருக்கும் ஒரு பல்துறைக்கலைஞரின் இழப்பு...


பல்துறைக் கலைஞர் வீரசிங்கம் ஐயா அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பு



தனக்காக தன்னையே உருவகித்துக்கொள்ள வைக்கும் சிறப்பு ஒரு சிலருக்கேயுண்டு. அந்த சிலரது இல்லாமையை மரணத்தின் கைகள் காலத்தின் மீது மிகக்கடுமையாக எழுதி விட்டுச்செல்கிறது. ஒரு கலைஞனின் மரணம் என்பது பிரத்யேக குணநலன்கள் கொண்டது. அது

Wednesday, May 8, 2019

எருவில் மாணிக்க ஜெயந்தன் சில அதீதங்களை படைக்க முயன்றிருக்கிறார்...

கவிஞர் எருவில்  மாணிக்க ஜெயந்தனின் இறுவட்டுக்கான அறிமுகவுரை


  கனத்த மனதுடனும் மௌனச் சுமையுடனும் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது காலத்தின் கட்டாயமும் கூட. நமக்கு தொலைக்காட்சி வந்தது ஆனால் அந்த தொலைக்காட்சி வெளிச்சத்தில் நமது ஆத்மவை தொலைத்து நிற்கிறோம். இந்த மோசமான சூழலில் இருந்து

Tuesday, May 7, 2019

"பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி" நாடகத்தில் ஒரு பாடல்...

இந்த வரிகளை எழுதுவதற்கான சூழலைத் தந்த பறப்பிழந்த 'வண்ணத்துப்பூச்சி' இயக்குனர் திரு அ.விமலராஜ் அவர்களுக்கு நன்றிகள்.







        பாடல் வரிகள்  : க.மோகனதாசன்
        இசை                  : யூட் நிரோசன் குணநாதன்
        பாடியவர்          : சபேசன்

சமகாலத்தை ஒப்பனைகளின்றி நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் ஈழக்கவி ரசிக்குமார்...

   
   அண்மையில் தனது "முட்களின் மேல் உறங்கிய இரவுகள்" கவிதை நூலினை ஈழக்கவி ரசிக்குமார் அவர்கள் எமக்கு வழங்கியிருந்தார். அந்தக்கவிதைகளை வாசித்தபின் அவை பற்றிய பொதுவானதொரு

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணம்...

இக்கட்டுரை 2017 ல்  "பேராசிரியர் சி.மௌனகுரு" மகுடம் சிறப்பிதழுக்காக எழுதியது...

 க.மோகனதாசன்
 
    பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணமென்பது 17 வருடங்களாகத் தொடர்வதாகும். 1994, 1996களில் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளில் பேராசிரியரைச் சந்தித்திருந்தாலும் 2001 லிருந்தே அவரது கையைப் பிடித்துக்கொண்டு சிகரங்கள் பற்றிய கனவுகளுடன் எம்மால் பயணிக்க முடிந்தது. அவர் எமக்கான சிறகுகள் மட்டுமன்றி நாம் பறப்பதற்கான வானத்தினையும்

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...



    ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத்தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

    ஔவையார் அமர்ந்த திண்ணை வீட்டில் "சிலம்பி" என்ற தாசி குலப் பெண் இருந்தாள். தன்

எந்தையிழந்தோம் எமையிழந்தோம்

சில புகைப்படங்கள்

மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்”

மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்”

http://www.svias.esn.ac.lk/?p=2234

Monday, May 6, 2019

என்னைப் போல் கடுமையாகத் தோற்றுப் போய் வா!

எங்கோ பிழைக்கிறது!
எனது
சமன்பாடுகள் எப்பொழுதும்
சரியான 
விடைகளையே
தந்திருக்கினறன!
அப்படியானால்
ஏன்

சவால்களின் சதங்கை கட்டிக்கொண்டு...

எனக்காகத் தரப்பட்ட
பூக்களுடனான வாழ்க்கை
திருடப்பட்டது எப்போது?
மரந்தங்கள் 
சீரழிக்கப்பட்டதான போதில்
எனக்குள்

அவனது இலட்சியங்களில் சிறுநீர் கழித்தவர்கள்

நேற்று அவனது
கனவு பற்றி
காறி உமிழ்ந்துவிட்டுச்
சென்றனர் சிலர்!
அவனது
கனாவின் வாசலில்
சூரியன் கட்டித்
தொங்கவிட்டிருப்பதை
அவர்கள்

மனச்சாட்சியிடம் ஒரு தரம் பேசி விட்டு வா

தனக்காக மட்டும்
ஓலமிடும் தராதரமே...!
எங்களைப் பிடிங்கிய பின்பும்
எதற்காகப் புலம்புகிறாய்?
எங்கள் வலி சூடி

இருட்டுத்தான்.. ஏகாந்தம்தான்..

நடுங்கிக் கொண்டிருக்கும்
எனது கனவுகளின் இடுக்குகளில்
எட்டிப் பார்க்கின்றன
ஏகாந்தத்தின் வலிகள்!
சிதைந்து கிடந்த என்னை
சேர்த்துத்

சிதறல்களை சேர்த்து எழுந்து வருவானென்று...

அவன் வாசித்து விட்டுப் போன
வீணை அப்படியே
கிடக்கிறது!
அவன் திரும்ப ஏறி வந்த
தோணியின் துடுப்பை

இன்னும் விழுந்து கிடக்கிறேன்

இன்று நீ
கொழுத்திப் போட்டுவிட்டுப் போன
வார்த்தை

ஒரு சிறுவனின் டயறிக் குறிப்பிலிருந்து....

ஒரு முரட்டு
நிமிஷத்தில்
எமது ஒட்டு மொத்த
சந்தோசத்தையும்
எங்கள் அப்பாவுடன் சேர்த்து
அள்ளிக் கொண்டு சென்றனர்!
கணாமலாக்கப்பட்ட
எம் வசந்தங்களை

முந்தநாள் முதுகு சொறிந்தவன்

என்னைத் தோண்டி வெளியில்
போடுவதற்கு
பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!
ஒளியினால்
உருவாக்கப்பட்ட
என்னைக் கண்டு

நீங்களோ உங்களின் எதிர் மறைகளின் கழிவறைகளிலிருந்து

உங்களால் என்னை
வாசிக்க முடியாத போது
எழுத்தேயில்லை என்கிறீர்கள்!
எனது கரைக்குக் கூட
நீங்கள் வந்திருக்கவில்லை
ஆனால்

அதிசயமான இடைவெளிகளில் நின்று உரையாடுகின்றோம்

எமது சுவாசப் பையை
அவர்களிடம் கொடுத்துவிட்டு
மூச்சு விடுவதற்காய்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
நெஞ்சிலும் நினைவிலும்
ரத்தம் சொட்டும்

ஏனென்றால் எமது பிள்ளைகள் வெளிநாட்டில்…

கடக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஒட்டிக்கிடக்கின்றன 
வசந்தகால
ஞாபகத் திசுக்கள்!

குஞ்சுகளின்

விடியட்டும் காத்திருக்கிறேன்

பெரும் கைதட்டல்களுடன்
மீண்டும்
ஆரம்பிக்கின்றன
புதிய அலப்பறைகள்!

நான் என்

நாசி துளைக்கும் மண் வாசனை மணக்கவே பேசுகிறார் சீலன்

எஸ்.ரீ. சீலனின் "ஊர்க்குருவியின் உலா" கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு


இந்த ஊர்க்குருவி இத்தேசமெங்கணும் உலாவித் திரிந்திருக்கிறது. அது சும்மா திரியவில்லை. தன் சிறகுகளில் மண்ணின் கனவுகளைச்சுமந்தே அலைந்திருக்கிறது. இந்த உலகில் இருந்து கிராமிய வாசம் இல்லாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பில் அக்குருவியின் நினைவின் அடுக்கு சரியத் தொடங்குகிறது. அச்சரிவின் அடிவாரமெங்கும் நீக்கமறச் சிதறும்
ஆளுமைகளைக் காணுதல் - அனுபவங்களைப்பகிர்தல் - ஆற்றல்களைக்கொண்டாடுதல் ; க.மோகனதாசன்

கட்டுரையினை வாசிப்பதற்கு.....
http://globaltamilnews.net/2017/36300/

Sunday, May 5, 2019



      ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது.

துன்பியலினூடாக ஒரு அரசியல், பண்பாட்டுப்பார்வை


ஏ.ஜி.யோகராஜா அவர்களின்  'புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்' எனும் நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு 

மிக மோசமான சமூக நிலமைகளின் கீழ் தான் அற்புதமான படைப்புக்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை காலங்கள் பல கடந்த பின்பும் கடந்த காலத்திற்குச்சாட்சியாக நிற்கும் அதேவேளை மக்களை விழிப்படையச்செய்யவும் எழுச்சியடையச்செய்யவும் காலத்தின் நிலைமைகளை தெரியப்படுத்தவும் பயன்பட்டன. முரண்களின் மோதல்களை ஒழுங்கமைப்பதுதான் நாடகமாகின்றது. நாடகங்களில் இது

உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது...

சுவாமி விபுலானந்தரின் சிந்தனைத்துளியொன்றை அடி நாதமாகக்கொண்டு இளைஞர்களை நோக்கி சில கருத்துக்கள்...


'உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப்பார், எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து, உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின், அறிவின், சக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும்'  என இளைஞர்களைப் பார்த்து சுவாமி விவேகாநந்தரால்  குறிப்பிடப்பட்டபடி இளைஞர்களே இன்றையின், நாளையின் சக்திகள்.

சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும்

துடித்து வீழ்ந்த சில பொழுதுகளின் 'நோக்காடு'

ஐயாராம் குணசீலன் அவர்களது 'நோக்காடு' நாடகப்பிரதிகள் நூலுக்கான அறிமுக உரை

நெரிக்கப்படும் குரல்வளைகளிலிருந்து பெருங்குரல்கள் உருவாகும் சாத்தியங்களும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. அது வாழ்வின் தீராத இடைவெளிகளில் நின்றுகொண்டு பெரும் அவலத்தை கறுப்பாக பெருங்குரலெடுத்து பதிவு செய்துவிட்டுச்செல்கிறது. இதைச் சொல்வதற்கோ

Saturday, May 4, 2019

பிரவீனின் 'பஞ்சதீபம்' நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு


    இன்றைய நியதிகளை சமூகத்தின் மனசாட்சியைக் கட்டமைப்பதில் பித்துநிலையில் எழுந்த கவித்துவச் சொற்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. கவிதைகளாக தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. தூரங்களைச் சிறகுகளால் கடக்கும் பறவை போல பல இறைநிலைப் பாடல்கள் எம்மை எங்கெல்லாமோ தூக்கிச் சென்றுவிடுகின்றன. அதனை

Thursday, May 2, 2019

அடுக்கிக்கட்டும் புரிதலின் அர்த்தச் சுமை...


லிங்கேசின் கவிதை நூலுக்கான அறிமுகம்


இங்கே ஒரு பிரக்ஞை சிலிர்க்கிறது. ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ள முடியாதபோது மௌனத்தில் சொல்லிச் சேர்த்தவை தூக்கிச் சுமக்கிற முதுகுகளின் விலாசக்கனம் பொருள் சொல்லிச் சேர்க்கும் தருணம் தக்கவைத்திருக்கின்ற

Saturday, April 27, 2019

பறை எனும் தமிழர் அடையாளம்

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நடனமான பறைமேளம் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. அதிர்ந்தெழும் பறையிசை- ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சக்தி கொண்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம்.

தோற்கருவிகளின் பொதுப் பெயராகவே இலக்கியங்களில் பறை என்பது

Friday, April 26, 2019

மட்டுநகர் கமல்தாஸின் "புரட்டப்படாத பக்கங்கள்" கவிதை நூலுக்கான நயவுரை

http://www.battinews.com/2017/10/blog-post_547.html#

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நினைவுப் பேருரை -

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நினைவுப் பேருரை - க.மோகனதாசன்

http://old.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122524/language/en-US/---.aspx#.XMKbZkRFPpY.b


http://valvettithurai.org/a-memorial-speech-about-professor-karthigesu-sivathamby-4738.html?date=1435775400

அடுத்த தலைமுறைக்கான விதை நெல்லைக்கூட விற்றுத் தின்னுகிறது நாம் கவனிக்காமல் விட்டுச்செல்லும் ஒரு சிறு தவறு...


Abad கிரிதாஸின் 'விளைகை' குறுந்திரைப்படம் பற்றிய உரை...

  படைப்பு வழியில் குறுந்திரைப்படங்கள் ஜனரஞ்சகத்தை நிறுத்தி, அலங்காரங்களின்றி அவசிய வாஞ்சையோடு வாழ்வின் பக்கங்களை தமது கமராக்கைகளால் மிக அவதானமாகப்

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...