Tuesday, October 29, 2019
கையாலாகா பொம்மைகள்...
ஆழ்துளையினை நிரப்பிக்கொண்டிருந்த
துயரமெல்லாம்
யார்யாரோ ஏறிக்குந்தியிருக்கும் பெருமலைகளாயின!
அந்த அந்தகாரத்தில் சிலர்
தமக்குரிய வெளிச்ச ஆடையினை நெய்து கொள்வதற்காய்
சிறிது நேரமெடுத்துக்கொண்டனர்.
அதற்காகக் கொண்டுவரப்பட்டன
கையாலாகா பொம்மைகள்.
- க.மோ.
Monday, October 21, 2019
மழையில் நனைதல்....2
ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
கையோடு என் கடந்த காலத்தை
அழைத்து வந்திருந்தது!
இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
ஒரு பெருங்குரலெடுத்து
தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
ஆனாலும் இந்த மழை
என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!
ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
நனைந்து கொண்டிருந்தான்
அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!
Sunday, October 20, 2019
மழையில் நனைதல்....1
மழையின் அர்த்தமெது என அகராதியில்
தேடியலைந்தவர்களுக்கு - அது
தன்னை எழுதிச் சென்றது
ஒரு அழகிய கவிதையாய்
Subscribe to:
Posts (Atom)
"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..
"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...
-
ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட...
-
பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது... ஒப்பனை எனும் போது 'உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்...
-
தகவல் பரிமாற்ற சாதனங்களையும் , அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் (Communications) ஆகும் . மனிதன...