தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நடனமான பறைமேளம் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. அதிர்ந்தெழும் பறையிசை- ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சக்தி கொண்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம்.
தோற்கருவிகளின் பொதுப் பெயராகவே இலக்கியங்களில் பறை என்பது