Thursday, May 23, 2019

"மனசு எத்தனை துண்டுகளாக உடைந்து கிடந்தாலும் அத்தனையும் தானாகவே ஒட்டக்கூடிய ஒரு மாய வித்தையினை இது புரிந்திருக்கிறது"


அழகு தனுவின், மட்.மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயத்திற்காக பாடப்பெற்ற 'ஓங்கார நாமம் இசைப் பாமாலை' நயவுரை


  இயந்திரங்களுடன் பழகி மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் உணர்வுகளை, கவலைகளை, கஸ்டங்களை, சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரியாத ஒருவித தனிமைப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தங்களும் மனப்பிறள்வுகளும்

தினேஸ்குமாரின் 'ஜக்கம்மா' ஆய்வு நூலுக்கான அறிமுகக்குறிப்பு


     'இது எங்கள் புனித நிலம்.  ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும்,

Sunday, May 19, 2019

தீராத பிரார்த்தனையில் திளைத்திருக்கிறது மனசு

"ஆரையம்பதி கண்ணகையம்மனின் புகழ்பாட வந்தோம்" இறுவட்டு பாடல்களுக்கான  நயவுரை...


 இற்றைப்பொழுது தனிமை மிகும் இதயத்தின் இடுக்குகளில் நிம்மதியை தேடிக்கொண்டு தவிக்கிறது. இந்த துயரம் கொடுக்கும் தனிமையின் பெருவலி உள்ளுக்குள் நெருப்பொன்று பூத்த உணர்வாய் அலைகிறது.

Thursday, May 16, 2019

நவீனத்தைப் புரிந்து கொள்ளல்

  'மொடேனிஸம் என்பது பொதுப்படையாக நோக்கும் போது, அது மேற்கத்தேயக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தேயப் பண்பாட்டிலே ஏற்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்டனவும், தடையற்ற பண்புடையனவுமான, மரபுத்தள விடுபாடுகளைக் குறிக்கும்.'
பேரா.கா.சிவத்தம்பி

Tuesday, May 14, 2019

செய்தி மடல் "சொர்ணாளி"

அழகு தனுவின் 'சுமைகள்' குறுந்திரைப்படத்திற்கான நயவுரை


  ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் இளைஞர்கள் புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். இன்று அந்த இடத்தைக்குறும்படம் எடுத்துக்கொண்டது. குறுந்திரைப்படங்கள் கருத்தியல் சார்ந்தும் பயன்படுத்தும் நுட்பங்கள் சார்ந்தும் பல தளங்களில் செயற்படுகின்றன.

Saturday, May 11, 2019

மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையை நாம் உணர்வதும் தொடர்வதும் என்பது இந்த நிகழ்வின் பிரதான செய்தியாகின்றது.

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் பற்றிய அறிமுகக்குறிப்பு...


 'நான் சிறுவனாக இருக்கும் போதே என்பாட்டியிடம் நிறைய கதை கேட்டிருக்கிறேன். என் பாட்டியின் பெயர் வள்ளிப்பிள்ளை. அவர் சொன்ன கதைகளை அப்படியே என் நண்பர்களிடமும் கூறுவேன். பின்னேரங்களில் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஆல மரத்தடியில் அமர்ந்து கதை சொல்வேன். என் கதையை கேட்க ஒரு கூட்டமே இருக்கும். குதிரை ஓடுவது மன்னரின் சிரிப்பு என கதைக்குள் வரும் ஒவ்வொரு விடயங்களையும் மிமிக்ரி செய்து சொல்வேன். நான் இப்படிக்கதை சொல்லும் விடயம் நான் உயர்தரம் படித்த

Thursday, May 9, 2019

பெரும் அதிர்வலையை எம்மில் பதிவு செய்திருக்கும் ஒரு பல்துறைக்கலைஞரின் இழப்பு...


பல்துறைக் கலைஞர் வீரசிங்கம் ஐயா அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பு



தனக்காக தன்னையே உருவகித்துக்கொள்ள வைக்கும் சிறப்பு ஒரு சிலருக்கேயுண்டு. அந்த சிலரது இல்லாமையை மரணத்தின் கைகள் காலத்தின் மீது மிகக்கடுமையாக எழுதி விட்டுச்செல்கிறது. ஒரு கலைஞனின் மரணம் என்பது பிரத்யேக குணநலன்கள் கொண்டது. அது

Wednesday, May 8, 2019

எருவில் மாணிக்க ஜெயந்தன் சில அதீதங்களை படைக்க முயன்றிருக்கிறார்...

கவிஞர் எருவில்  மாணிக்க ஜெயந்தனின் இறுவட்டுக்கான அறிமுகவுரை


  கனத்த மனதுடனும் மௌனச் சுமையுடனும் ஓடுவது இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது அது காலத்தின் கட்டாயமும் கூட. நமக்கு தொலைக்காட்சி வந்தது ஆனால் அந்த தொலைக்காட்சி வெளிச்சத்தில் நமது ஆத்மவை தொலைத்து நிற்கிறோம். இந்த மோசமான சூழலில் இருந்து

Tuesday, May 7, 2019

"பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி" நாடகத்தில் ஒரு பாடல்...

இந்த வரிகளை எழுதுவதற்கான சூழலைத் தந்த பறப்பிழந்த 'வண்ணத்துப்பூச்சி' இயக்குனர் திரு அ.விமலராஜ் அவர்களுக்கு நன்றிகள்.







        பாடல் வரிகள்  : க.மோகனதாசன்
        இசை                  : யூட் நிரோசன் குணநாதன்
        பாடியவர்          : சபேசன்

சமகாலத்தை ஒப்பனைகளின்றி நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் ஈழக்கவி ரசிக்குமார்...

   
   அண்மையில் தனது "முட்களின் மேல் உறங்கிய இரவுகள்" கவிதை நூலினை ஈழக்கவி ரசிக்குமார் அவர்கள் எமக்கு வழங்கியிருந்தார். அந்தக்கவிதைகளை வாசித்தபின் அவை பற்றிய பொதுவானதொரு

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணம்...

இக்கட்டுரை 2017 ல்  "பேராசிரியர் சி.மௌனகுரு" மகுடம் சிறப்பிதழுக்காக எழுதியது...

 க.மோகனதாசன்
 
    பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான எனது பயணமென்பது 17 வருடங்களாகத் தொடர்வதாகும். 1994, 1996களில் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளில் பேராசிரியரைச் சந்தித்திருந்தாலும் 2001 லிருந்தே அவரது கையைப் பிடித்துக்கொண்டு சிகரங்கள் பற்றிய கனவுகளுடன் எம்மால் பயணிக்க முடிந்தது. அவர் எமக்கான சிறகுகள் மட்டுமன்றி நாம் பறப்பதற்கான வானத்தினையும்

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...



    ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத்தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

    ஔவையார் அமர்ந்த திண்ணை வீட்டில் "சிலம்பி" என்ற தாசி குலப் பெண் இருந்தாள். தன்

எந்தையிழந்தோம் எமையிழந்தோம்

சில புகைப்படங்கள்

மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்”

மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்”

http://www.svias.esn.ac.lk/?p=2234

Monday, May 6, 2019

என்னைப் போல் கடுமையாகத் தோற்றுப் போய் வா!

எங்கோ பிழைக்கிறது!
எனது
சமன்பாடுகள் எப்பொழுதும்
சரியான 
விடைகளையே
தந்திருக்கினறன!
அப்படியானால்
ஏன்

சவால்களின் சதங்கை கட்டிக்கொண்டு...

எனக்காகத் தரப்பட்ட
பூக்களுடனான வாழ்க்கை
திருடப்பட்டது எப்போது?
மரந்தங்கள் 
சீரழிக்கப்பட்டதான போதில்
எனக்குள்

அவனது இலட்சியங்களில் சிறுநீர் கழித்தவர்கள்

நேற்று அவனது
கனவு பற்றி
காறி உமிழ்ந்துவிட்டுச்
சென்றனர் சிலர்!
அவனது
கனாவின் வாசலில்
சூரியன் கட்டித்
தொங்கவிட்டிருப்பதை
அவர்கள்

மனச்சாட்சியிடம் ஒரு தரம் பேசி விட்டு வா

தனக்காக மட்டும்
ஓலமிடும் தராதரமே...!
எங்களைப் பிடிங்கிய பின்பும்
எதற்காகப் புலம்புகிறாய்?
எங்கள் வலி சூடி

இருட்டுத்தான்.. ஏகாந்தம்தான்..

நடுங்கிக் கொண்டிருக்கும்
எனது கனவுகளின் இடுக்குகளில்
எட்டிப் பார்க்கின்றன
ஏகாந்தத்தின் வலிகள்!
சிதைந்து கிடந்த என்னை
சேர்த்துத்

சிதறல்களை சேர்த்து எழுந்து வருவானென்று...

அவன் வாசித்து விட்டுப் போன
வீணை அப்படியே
கிடக்கிறது!
அவன் திரும்ப ஏறி வந்த
தோணியின் துடுப்பை

இன்னும் விழுந்து கிடக்கிறேன்

இன்று நீ
கொழுத்திப் போட்டுவிட்டுப் போன
வார்த்தை

ஒரு சிறுவனின் டயறிக் குறிப்பிலிருந்து....

ஒரு முரட்டு
நிமிஷத்தில்
எமது ஒட்டு மொத்த
சந்தோசத்தையும்
எங்கள் அப்பாவுடன் சேர்த்து
அள்ளிக் கொண்டு சென்றனர்!
கணாமலாக்கப்பட்ட
எம் வசந்தங்களை

முந்தநாள் முதுகு சொறிந்தவன்

என்னைத் தோண்டி வெளியில்
போடுவதற்கு
பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!
ஒளியினால்
உருவாக்கப்பட்ட
என்னைக் கண்டு

நீங்களோ உங்களின் எதிர் மறைகளின் கழிவறைகளிலிருந்து

உங்களால் என்னை
வாசிக்க முடியாத போது
எழுத்தேயில்லை என்கிறீர்கள்!
எனது கரைக்குக் கூட
நீங்கள் வந்திருக்கவில்லை
ஆனால்

அதிசயமான இடைவெளிகளில் நின்று உரையாடுகின்றோம்

எமது சுவாசப் பையை
அவர்களிடம் கொடுத்துவிட்டு
மூச்சு விடுவதற்காய்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
நெஞ்சிலும் நினைவிலும்
ரத்தம் சொட்டும்

ஏனென்றால் எமது பிள்ளைகள் வெளிநாட்டில்…

கடக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஒட்டிக்கிடக்கின்றன 
வசந்தகால
ஞாபகத் திசுக்கள்!

குஞ்சுகளின்

விடியட்டும் காத்திருக்கிறேன்

பெரும் கைதட்டல்களுடன்
மீண்டும்
ஆரம்பிக்கின்றன
புதிய அலப்பறைகள்!

நான் என்

நாசி துளைக்கும் மண் வாசனை மணக்கவே பேசுகிறார் சீலன்

எஸ்.ரீ. சீலனின் "ஊர்க்குருவியின் உலா" கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு


இந்த ஊர்க்குருவி இத்தேசமெங்கணும் உலாவித் திரிந்திருக்கிறது. அது சும்மா திரியவில்லை. தன் சிறகுகளில் மண்ணின் கனவுகளைச்சுமந்தே அலைந்திருக்கிறது. இந்த உலகில் இருந்து கிராமிய வாசம் இல்லாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பில் அக்குருவியின் நினைவின் அடுக்கு சரியத் தொடங்குகிறது. அச்சரிவின் அடிவாரமெங்கும் நீக்கமறச் சிதறும்
ஆளுமைகளைக் காணுதல் - அனுபவங்களைப்பகிர்தல் - ஆற்றல்களைக்கொண்டாடுதல் ; க.மோகனதாசன்

கட்டுரையினை வாசிப்பதற்கு.....
http://globaltamilnews.net/2017/36300/

Sunday, May 5, 2019



      ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது.

துன்பியலினூடாக ஒரு அரசியல், பண்பாட்டுப்பார்வை


ஏ.ஜி.யோகராஜா அவர்களின்  'புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்' எனும் நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு 

மிக மோசமான சமூக நிலமைகளின் கீழ் தான் அற்புதமான படைப்புக்கள் படைக்கப்பட்டுள்ளன. இவை காலங்கள் பல கடந்த பின்பும் கடந்த காலத்திற்குச்சாட்சியாக நிற்கும் அதேவேளை மக்களை விழிப்படையச்செய்யவும் எழுச்சியடையச்செய்யவும் காலத்தின் நிலைமைகளை தெரியப்படுத்தவும் பயன்பட்டன. முரண்களின் மோதல்களை ஒழுங்கமைப்பதுதான் நாடகமாகின்றது. நாடகங்களில் இது

உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது...

சுவாமி விபுலானந்தரின் சிந்தனைத்துளியொன்றை அடி நாதமாகக்கொண்டு இளைஞர்களை நோக்கி சில கருத்துக்கள்...


'உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப்பார், எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து, உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின், அறிவின், சக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும்'  என இளைஞர்களைப் பார்த்து சுவாமி விவேகாநந்தரால்  குறிப்பிடப்பட்டபடி இளைஞர்களே இன்றையின், நாளையின் சக்திகள்.

சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும்

துடித்து வீழ்ந்த சில பொழுதுகளின் 'நோக்காடு'

ஐயாராம் குணசீலன் அவர்களது 'நோக்காடு' நாடகப்பிரதிகள் நூலுக்கான அறிமுக உரை

நெரிக்கப்படும் குரல்வளைகளிலிருந்து பெருங்குரல்கள் உருவாகும் சாத்தியங்களும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. அது வாழ்வின் தீராத இடைவெளிகளில் நின்றுகொண்டு பெரும் அவலத்தை கறுப்பாக பெருங்குரலெடுத்து பதிவு செய்துவிட்டுச்செல்கிறது. இதைச் சொல்வதற்கோ

Saturday, May 4, 2019

பிரவீனின் 'பஞ்சதீபம்' நூலுக்கான ஒரு அறிமுகக்குறிப்பு


    இன்றைய நியதிகளை சமூகத்தின் மனசாட்சியைக் கட்டமைப்பதில் பித்துநிலையில் எழுந்த கவித்துவச் சொற்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. கவிதைகளாக தூய எழுச்சி நிலைகளாக அவை அடையப்படுகின்றன. தூரங்களைச் சிறகுகளால் கடக்கும் பறவை போல பல இறைநிலைப் பாடல்கள் எம்மை எங்கெல்லாமோ தூக்கிச் சென்றுவிடுகின்றன. அதனை

Thursday, May 2, 2019

அடுக்கிக்கட்டும் புரிதலின் அர்த்தச் சுமை...


லிங்கேசின் கவிதை நூலுக்கான அறிமுகம்


இங்கே ஒரு பிரக்ஞை சிலிர்க்கிறது. ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ள முடியாதபோது மௌனத்தில் சொல்லிச் சேர்த்தவை தூக்கிச் சுமக்கிற முதுகுகளின் விலாசக்கனம் பொருள் சொல்லிச் சேர்க்கும் தருணம் தக்கவைத்திருக்கின்ற

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...