Saturday, July 6, 2019

மாணவர்களுக்கு ஒரு தெளிவான கற்றல் அனுபவத்தை தரவல்லது...


வாழ்த்துரை



பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக திகழும் நண்பன் நாகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது பல்கலைக்கழகம் என்றாலும் அவரது ஆளுமையும் சிந்தனைப்போக்குமே அவரின் தோளில் கைபோட்டுக்கொண்டு தொடர்ச்சியாக பயணிப்பதற்கான பாதையினை உருவாக்கித்தந்திருந்தன. பல்கலைக்கழக காலங்களில் இவர் பங்கு பற்றிய பல்வேறு ஆற்றுகைகளும் காத்திரமான நாடகம் சார் ஆய்வரங்குகளும் இவர் யார்? இவரது ஆற்றல் என்ன? இவரது கருத்துலகம் என்ன? என்பதை சரியாக அடையாளம் காட்டியிருந்தன. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நண்பன் நாகேந்திரன் மிக ஆழமான புலமைத்தேர்ச்சியுள்ளவன் என்பதை அவரோடு கதைக்கும் சிறிது நேரத்திலேயே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

Monday, July 1, 2019

மண்வாசனையை அள்ளி வார்த்தைகளிலும் சித்தரிப்புக்களிலும் அப்பியிருக்கிறார்...

பாரத்தின் 'துளிர் இலை' சிறுகதை நூலுக்கான அறிமுகக் குறிப்பு...


  படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் தமது அனுபவங்களை படைப்புக்களாக வெளியிடுகின்றனர். மனித வாழ்வியலை படைப்புக்களினூடாக சொல்லும் போது சில அனுபவங்கள் பொது அனுபவங்களாகவும் ஆகிவிடுகின்றன. அவ்வாறான பொது அனுபவங்கள் அப்படைப்பின் அங்கீகாரத்தினை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றன. ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக் கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவதே சிறுகதையாகும். சிறுகதைகள் தனித்தன்மையைப் பெற்றிருப்பதற்குக் காரணம் பாத்திரங்கள் உணர்வுகளை சொல்லும் விதத்தை மிகச் சரியாகக் கையாள முடியும் என்பதனாலாகும்.

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...