Monday, October 21, 2019

மழையில் நனைதல்....2


                               ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
                               கையோடு என் கடந்த காலத்தை
                               அழைத்து வந்திருந்தது!

                               இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
                               ஒரு பெருங்குரலெடுத்து
                               தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
                               ஆனாலும் இந்த மழை
                               என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!

                               ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
                               மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
                               நனைந்து கொண்டிருந்தான்
                              அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
                              நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!

No comments:

Post a Comment

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...