கவிதை நூலுக்கான நயவுரையிலிருந்து நறுக்கியவை...
ஒரு மழை நாளில் வெல்லவூர் சுபேதனும் ஈழக்கவி ரசிகுமாரும் என்னைச்சந்திக்க வந்திருந்தனர். தான் நனைந்தாலும் தனது குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்ளும் தாயைப்போல், நனைந்திருந்த தமக்குள்ளிருந்து நனையாமல் வைத்திருந்த நதியில் நீந்தும் நட்சத்திரங்களைத் தந்திருந்தனர்.