அதியமான் மீது பகை கொண்ட, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஔவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். ஔவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தொண்டைமானின் மாளிகையில் ஔவைக்கு மிகுந்த மரியாதை அளிக்ககப்பட்டது.
Monday, December 9, 2019
Tuesday, November 12, 2019
வெல்லவூர் சுபேதனின் "நதியில் நீந்தும் நட்சத்திரங்கள்"
கவிதை நூலுக்கான நயவுரையிலிருந்து நறுக்கியவை...
ஒரு மழை நாளில் வெல்லவூர் சுபேதனும் ஈழக்கவி ரசிகுமாரும் என்னைச்சந்திக்க வந்திருந்தனர். தான் நனைந்தாலும் தனது குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்ளும் தாயைப்போல், நனைந்திருந்த தமக்குள்ளிருந்து நனையாமல் வைத்திருந்த நதியில் நீந்தும் நட்சத்திரங்களைத் தந்திருந்தனர்.
Saturday, November 9, 2019
ஸ்டீஃபன் ஹாக்கிங் - My Inspiration
ஐன்ஸ்டினுக்குப் பிறகு விஞ்ஞான உலகிலிருந்துகொண்டு பிரபஞ்ச புதிர்களின் முக்கியம் எனக் கருதப்படும் கருந்துளை குறித்து தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய மனிதர் தன்னுடைய 76 வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
Tuesday, October 29, 2019
கையாலாகா பொம்மைகள்...
Monday, October 21, 2019
மழையில் நனைதல்....2
ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
கையோடு என் கடந்த காலத்தை
அழைத்து வந்திருந்தது!
இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
ஒரு பெருங்குரலெடுத்து
தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
ஆனாலும் இந்த மழை
என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!
ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
நனைந்து கொண்டிருந்தான்
அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!
Sunday, October 20, 2019
மழையில் நனைதல்....1
மழையின் அர்த்தமெது என அகராதியில்
தேடியலைந்தவர்களுக்கு - அது
தன்னை எழுதிச் சென்றது
ஒரு அழகிய கவிதையாய்
Wednesday, September 18, 2019
கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கு : சிலப்பதிகார கானல்வரியில் குறிப்பிடப்படும் இசைச்சேதிகளை உள்ளடக்கிய ஆய்வு
அறிமுகம் :
கிழக்கிலங்கைத் தமிழர் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடானது முக்கிய இடத்தினைப்பெறுகின்றது. பொதுவாக பெண் தெய்வ வழிபாட்டினை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரிக்க முடியும். கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டுப்பரப்பில் தாய்த்தெய்வங்களே அதிக முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பார்த்ததனால் பெண் தெய்வ வழிபாடு தாய்த்தெய்வ வழிபாடாக மாறியது. ஆண்தெய்வங்கள் மீதில்லாத பயமும் மரியாதையும் பெண் தெய்வங்கள் மீது அதீதமாக வெளிப்படுவதை இந்த வழிபாட்டு முறைகளிலிருந்து காண முடிகின்றது. இவ்வழிபாடுகளின் போது இசைக்கென்று ஒரு தனியிடம் உண்டு. ஒப்பீட்டளவில் அதிகமான பெண் தெய்வ வணக்க முறையும் அதற்காக அதிகளவான இசைப்பாடல்களையும் கொண்டமைந்திருப்பது கிழக்கிலங்கைப் பெண் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சங்களாகின்றன. அத்தோடு சிலப்பதிகாரத்தில் பெண் தெய்வ வணக்க முறைகள், அதன் உருவாக்கற் பின்னணி என்பன பற்றி தெரிவித்திருப்பதோடு குறிப்பாக புகார்க்;காண்டத்தின் கானல்வரியில் இசை பற்றிய பல்வேறு செய்திகளையும் எம்மால் அறிய முடிகின்றது. இந்தப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலங்கையில் பெண் தெய்வ வழிபாட்டில் இசையின் வகிபங்கினை ஆய்வு செய்வதாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அமைகின்றது.
Subscribe to:
Posts (Atom)
சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..
ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...
-
அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை...
-
ஒரு நாடகத்தின் பௌதீகச் சூழலை மேடையில் கொண்டு வருவதற்கு காட்சியமைப்பு உதவுகின்றது. அரங்கு கட்புல, செவிப்புல, மூலங்களைக் கொண்டது. இதில் கட...
-
பாரம்பரிய அரங்குகளை அடிப்படையாகக் கொண்டது... ஒப்பனை எனும் போது 'உடைக்கு வெளியே ஏனைய உடற்பாகங்கள் என்பவற்றுக்கு வேண்டிய பூச்சுக்...






