
துயரமெல்லாம்
யார்யாரோ ஏறிக்குந்தியிருக்கும் பெருமலைகளாயின!
அந்த அந்தகாரத்தில் சிலர்
தமக்குரிய வெளிச்ச ஆடையினை நெய்து கொள்வதற்காய்
சிறிது நேரமெடுத்துக்கொண்டனர்.
அதற்காகக் கொண்டுவரப்பட்டன
கையாலாகா பொம்மைகள்.
- க.மோ.
ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...