Saturday, December 3, 2022

நோய் நொடி

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் நொடி என்றால் என்ன ?



நோய் என்பது தெரியும். உடலுக்கோ மனத்திற்கோ ஏற்படும் நலக்குறைவு. ஒருவர் நோயுறுவதற்கு புறச்சூழலும் காரணமாகலாம். அவருள் நிகழ்வனவும் காரணமாகலாம். நோயில்லாமல் வாழ்வதுதான் பெரும்பேறு. தருமரிடம் வினவப்பட்ட வினா ஒன்று : உலகில் ஒருவர் அடைதற்கரிய செல்வம் எது ? அவருடைய உடல்நலம் (ஆரோக்கியம்) என்பது அன்னார் விடை.  

நொடி என்பது தாழ்வுறுதல். அதுநாள்வரை வாழ்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி. நொடித்துப் போதல் என்று சொல்வார்கள். நோய் என்பது உடல்நலக்குறைவு. நொடி என்பது திகழ்நலக்குறைவு. பொருளியல் நோக்கு மட்டுமில்லை. நன்னிலை வீழ்ச்சிகள் யாவும் நொடித்துப் போதலே. 

உடலாலும் தேய்வின்றி, உள்ள பிற நிலையாலும் தாழ்வின்றி வாழ்தலே நோய்நொடியின்றி வாழ்தல்.

-மகுடேசுவரன்

Wednesday, November 16, 2022

தொடர்பாடல் பற்றிய அறிவு ஏன் எமக்கு அவசியமாகின்றது?



உலகில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை, தங்களுக்கு இடையில் கருத்துக்களையும், செய்திகளையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொண்டே வருகின்றன. பரிணாமவளர்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மனித இனம் பல வகையான ஊடகங்கள், ஊடக உத்திகள், ஊடகக்காவிகள் என்பவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது. தகவல் தொடர்பாடலின் பல்பக்கப் பரிமாணம் உலகை,  உலகக் கிராமம் என்று சொல்லுமளவிற்கு வளர்ச்சிகண்டுள்ளது.

Saturday, November 12, 2022

நாடகப்பனுவல்

முன் குறிப்பு: நான் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையை விட்டு வந்து 23 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் விட்டகுறை, தொட்டகுறையா மாணவர்களின் விசாரிப்புகளும் வினாக்களும் தொடர்கின்றன. அதைவிடவும் இலங்கையில் அரங்கியல் பயிலும் பலரும் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது தனித்தனியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்காகச் சிலவற்றை எழுதுகிறேன். அரங்கியலில் விருப்பம் உள்ளவர்களுக்கும் பயன்படலாம் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்கள் விலகிச் செல்லலாம்.

Sunday, September 25, 2022

கலை என்றால் என்ன?


கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை பொருளாகவும் இருக்கும்.

Friday, July 8, 2022

திரு சு.சந்திரகுமார் அவர்களின் "நஞ்சு மனிதர் - பனுவலும் ஆற்றுகையும்"...



இன்றைய சூழலில் படைப்பு, விமர்சனம் என்பன வாசகநிலைப்பட்டதாக மாறியிருக்கின்றன. வாசிப்பு, எதிர் வாசிப்பு, கட்டுடைப்பு வாசிப்பு, மீள்வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்ற சொல்லாடல்கள் தற்பொழுது அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. காரணம், வாசிப்பு இன்று முதன்மை பெற்றிருக்கிறது. படைப்பு, வாசிப்பு ஆகிய இரண்டின் பிணைப்பும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இதனால் பெரும்பாலும் படைப்புகள் வாசகநிலையில் இருந்தே புரிந்து கொள்ளப்படுகின்றன.

Tuesday, March 16, 2021

வாழ்வில் நமக்குத் தெரிந்த ஒன்றின் மூலம் தெரியாத ஒரு அற்புதத்தை ஆழ்மனதில் உருட்டிவிட்டுப்போகும் தன்மையுடையவை ஆ.மு.சி.வேலழகன் அவர்களது வார்த்தைகள்


எங்கோ ஏதோ ஓர் குழந்தை துயருறுகையில் தம் பிள்ளைகளை இழுத்து  கட்டியணைத்துக் கொள்வது ஒவ்வோர் தகப்பனின் ஒவ்வோர் தாயின் அனிச்சை மற்றும் எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல். வன்முறை மிகுந்த வாழ்வில் எளியதைப் பற்றிக்கொண்டு அல்லது எளியதன் அழகில் மெல்லிய உணர்வுகளின் வழி கிறங்கி வாழச் சொல்லி அழைப்பவை ஆ.மு.சி.வேலழகன் ஐயாவின் எழுத்துக்கள். இயல்பாய் இரு, சுயசிந்தனையுடன் இரு என்பது அவர் எழுத்துக்களில் வெகுவாய்த்தொனிக்கும், வார்த்தைகளை மீறிய நாதமாக ஒலிக்கிறது. சிக்கலற்ற மொழியும், நனவோடை உத்தியும், நாம் வாழத்தவறி நடுவீதியில் கிடத்திவிட்டுச் செல்லும் அன்றாடத்தைப் புதிதாகத் துலக்கி வைத்து சக மனிதர்களை நேசத்தோடு வாழச்சொல்லி அழைக்கும் எழுத்துக்கள் ஆ.மு.சியினுடையது.

Sunday, March 7, 2021

அவர் எடுத்துத்தரும் அர்த்தமும் அதன் தத்துவமும் ஒரு கனவினை, ஒரு அழகிய வாழ்வினை வாழும்படி கை நீட்டி அழைக்கின்றன.

(ஆரையூர் அருள் அவர்களின் "வில்லடிப்பாட்டு" நூலுக்கான நயவுரை)


வில்லுப்பாட்டானது மக்களின் அகத்திலெழும் உணர்ச்சிகளோடு ஒன்றி வளரும் கலையாகக் காணப்படுகிறது. நாடகத்தன்மை மிகுந்த நிலையில் கதை கூறலில் இது உருவாக்கித் தரும் பயன்பாடுகள் பலவாகும். மரபு வழிக் கதைகள் முதல் இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரை வாழ்வியலை அதன் தத்துவத்தை எளிதாகக் கூறும் வல்லபம் வாய்ந்தது வில்லுப்பாட்டு. தமிழுக்குத் தனித்துவம் வாய்ந்த இலக்கிய வடிவமாகவும் ஆற்றுகை வடிவமாகவும் வில்லுப்பாட்டு இலங்குகின்றது. இதனால் மிகச்சிறந்த கதைக் கூற்றரங்கு (Narrative Theatre) என்ற நிலையை வில்லுப்பாட்டுப் பெறுகிறது.  மக்களையும் கதையின் போக்கினூடே ஒன்றவைத்துக் கதை கூறும் வடிவமாக, எந்தக் கால அளவுக்குள்ளும் ஒரு கதையினைப் படைத்துக்காட்ட ஏற்ற நாடக வடிவமாக இது திகழ்கிறது. ஆக நம்மோடு இயல்பாக உரையாடக்கூடிய தன்மை வில்லுப்பாட்டுக்குள்ளது. இந்த சாத்தியங்களைக் கருத்தில்கொண்டே, தமிழின் மகத்துவங்களை பண்பாட்டின் நடுவழியில் தவறவிடப்பட்ட வாழ்வை மீள கொணரும் வேட்கையில் பல்கலை வித்தகர் மூ.அருளம்பலம் ஐயா அவர்களால் காலத்தின் தேவைகருதி உருவாக்கப்பட்டிருக்கிறது 'வில்லடிப்பாட்டு' எனும் இந்நூலாகும். இந்தப் புத்தகம் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 36 புத்தகங்களை உருவாக்கி தமிழன்னைக்கு ஆரமாகச் சூட்டியிருக்கும் அந்தப் பெருமகனாரை நாமும் தலைவணங்கி நிற்கின்றோம்.

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...