Tuesday, April 14, 2020

வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889'


இன்றைய சூழலில் வான்காவின் 'நட்சத்திர இரவு – 1889' ஓவியம் பெருங்குரலெடுத்து என்னோடு பேசுகிறது..


நான் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது பேராசிரியர் மௌனகுரு sir அவர்கள் விரிவுரைக்காக எனக்குத் தரும் பாடங்கள் பெரும்பாலும் கலை வரலாறு, ஓவிய வரலாறு என்பனவாகவே இருக்கும். வான்கா, கோகான், மொனே, செசான், சல்வடோர் டாலி, பிக்காசோ, ரெனே மக்ரித், லியனாடோடாவின்சி, மைக்கல் அஞ்சலோ, றபாயல், ஆதிமூலம், தனபால், அல்போன்சா, மூக்கையா, மார்க் மாஸ்டர், ஜோர்ஜ் கீத், மங்சுசிறி என நிறைய ஓவியர்களும் அவர்களது ஓவியங்களும் எனக்கு அப்போது அறிமுகமாயின. சிலரது சில ஓவியங்கள் அப்படியே மனதில் ஒட்டிவிடும். பிக்காசோவின் குவார்ணிகா, சல்வடோர்டாலியின் வடிந்தொழுகும் கடிகாரங்கள், வான்காவின் சூரியகாந்தி, கோகானின் சூரியோதயம், மைக்கல் அஞ்சலோவின் ஆதாமின் படைப்பு, ரெனே மக்ரித்தின் பைரனீஸ் கோட்டை போன்றன சில உதாரணங்கள்.

ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்


செவிகளை அடைக்கும் பேரிரைச்சலாக
மௌனம் தெருவிலே குந்தியிருக்க...
வீட்டின் நிழல் தரும் தகிப்பு - ஒரு
வெட்டவெளி வெயிலின் குளிர்ச்சியைத் தேட...
ஒரு அனர்த்த காலத்துப் புல்லாங்குழல்
இறந்த காலத்தின் இசையை
எங்கிருந்தோவெல்லாம் மீட்டெடுத்துப் பாட...

Sunday, April 12, 2020

"தென்னாடுடையவனே எந்நாட்டிலும்..." திரு ஆ.மு.சி வேலழகன் அவர்களது நூலுக்கானஅணிந்துரை



இது உலகத் தோற்றத்தின் கதை, நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விடயங்களோடு, பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் மனித பரிணாமத்தின் கதை. அந்த வரலாற்றிலும் பரிணாமத்திலும் தமிழ்ப்பண்பாட்டின் வகிபங்கு பற்றிய கதை. வரலாற்று உண்மைகளை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் மேலும் நம்மை தேடும் விதத்திலும் கூற முடியுமா? நம்மைத் திகைக்க வைக்கிறார் ஆ.மு.சி. வேலழகன் ஐயா அவர்கள். 

Saturday, April 11, 2020

ஆத்திசூடியில் ஒளவை கூறும் வாழ்வியல் நெறிகள்.


அறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத்தொடங்கி ஓரம் சொல்லேல் என முடிகின்ற அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி நிற்கும் ஆத்திசூடி வரிகளை அவதானிக்கும் போது, வாழ்வைப்பற்றி குறிப்பாக மனித இயக்கங்களை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை சுருக்கமாக அதே நேரம் தெளிவாகச் சொல்வதாக அமைந்து காணப்படுகின்றன. 'ஆத்திசூடி' என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல் சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது. 

ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு 'ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும்' என்ற யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் தருகிறது. ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளனவாக ஆத்திசூடி அமைந்துள்ளது. வாழ்க்கை குறித்த கவனத்தைத் தருவதாக வெளிப்படும் ஒளவையாரின ஆத்திசூடி வரிகளுக்குப் பின்புலமாக தெளிவான பிரக்ஞா பூர்வமான ஒரு மனம் செயல்படுவதைக் காண முடியும்.

மற்ற உயிரினங்களோடு ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக் கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்கு முன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னைக் காண்கிறான். வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும். சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அமிழ்த்தி விடுவார்கள். எனவே தான் ஒளவை சொன்னார், 'மிகைப்பட பேசேல்' என்று. அதிகம் கலவரப்படாது சாதாரணமாக பேசிப் பழக வேண்டும். அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை சரி செய்யும் பக்குவம் வரும்.

Diderot effect

 Diderot effect