Tuesday, October 29, 2019

கையாலாகா பொம்மைகள்...


ஆழ்துளையினை நிரப்பிக்கொண்டிருந்த
துயரமெல்லாம்
யார்யாரோ ஏறிக்குந்தியிருக்கும் பெருமலைகளாயின!
அந்த அந்தகாரத்தில் சிலர்
தமக்குரிய வெளிச்ச ஆடையினை நெய்து கொள்வதற்காய்
சிறிது நேரமெடுத்துக்கொண்டனர்.
அதற்காகக் கொண்டுவரப்பட்டன
கையாலாகா பொம்மைகள்.
- க.மோ.




Monday, October 21, 2019

மழையில் நனைதல்....2


                               ஒரு தீரா நினைவைக் கிளறும் தீரா மழை
                               கையோடு என் கடந்த காலத்தை
                               அழைத்து வந்திருந்தது!

                               இந்த மழையோடு நான் பேசும் வார்த்தைகள்
                               ஒரு பெருங்குரலெடுத்து
                               தொண்ணூறுகளின் அவலங்களைத் தொட்டுச்செல்லும்
                               ஆனாலும் இந்த மழை
                               என் மனதோடு இயல்பாகப் பேசுகிறது!

                               ஒரு ஆழ் நினைவை கொண்டு வந்திருந்த
                               மழையை வரைந்து கொண்டிருந்தவனும்
                               நனைந்து கொண்டிருந்தான்
                              அதீதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டிருந்த நானோ
                              நனவிடைத் தோய்ந்துகொண்டிருந்தேன்!

Sunday, October 20, 2019

மழையில் நனைதல்....1



                                மழையின் அர்த்தமெது என அகராதியில்
                                தேடியலைந்தவர்களுக்கு - அது
                                தன்னை எழுதிச் சென்றது
                                ஒரு அழகிய கவிதையாய்

Diderot effect

 Diderot effect